Friday, August 8, 2014

4.Thai Mann.

   இனிமையான இரவு நேரங்கள்,விஜயனுக்கும்,மீனாவுக்கும் மிகவும்

பிடித்தமான நேரங்கள்.ஒன்பதைரைக்குள் இரவு உணவை முடித்துவிட்டு,

மகனுடன் ஒரு அரை மணிநேரம் போல் அளவளாவுதல் மிகவும்

சந்தோஷமான தருணங்கள்.அதுவும் மகளும்,மகனும் சேர்ந்து விட்டால்,

தங்களது பெற்றோரின் தலைகளை உருட்டிக்கொண்டே இருப்பதுதான்

அவர்களது முழு நேர வேலையாக இருக்கும்.சிரிப்பு சத்தம் கேட்டுக்

கொண்டே இருக்கும்.


   அவர்கள் தன் தாய்க்கு வைத்தச்  செல்ல பெயர் ' ட்யுப் லைட் '.அவர்களது

'டைம்லி ஜோக்ஸ் ' எதுவும்அவளுக்கு எளிதில் புரியாது.ஏன்,தொலைக்காட்சி

விளம்பரங்கள் பலவும் குழந்தைகளின் விளக்கத்திற்கு பிறகுதான்

புரியும்.ஆனால் விஜயன் அவர்களுக்கு சரிக்கு சமமாக ஈடு கொடுப்பான்.

மீனா,விஜயனிடம் எப்போதும் ஆச்சரியப்பட்டுக் கொண்டே இருப்பாள்.

" இந்த தலைமுறைக்கு எப்படித்தான் எல்லா விஷயங்களும் மின்னல்

வேகத்தில் புரிகிறதோ ".சமயங்களில் இந்தத் தலைமுறையின் வேகம்

பயந்தரும் விஷயமாக கூடத் தோன்றும்.


   பல சமயங்களில் அவளுக்கு தோன்றுவதுண்டு.தனது தலைமுறை வரை

எல்லா வகையான மாற்றங்களும் ஒரு நிதானத்தில் மாறிக் கொண்டிருந்தன

என்றும்,ஆனால் இந்த தலை முறையிலிருந்து மாற்றங்களின்  வேகம்

தாக்குப் பிடிக்க முடியாததாய் இருக்கிறது  என்றும் தோன்றியது.

அதன் வேகத்திற்கு ஈடு கொடுப்பது  இயலாத காரியமாய் தோன்றியது.


   குழந்தைகளுடன் கொண்டாடிய சந்தோஷமான தருணங்களை கூடவே

அழைத்துக் கொண்டு அவைகளை மடியில் இருத்தி,தங்களது படுக்கை

அறையின் பால்கனியில்,இரவு நேரத் தென்றலை அனுபவித்தப்படி,

வானுலகை ரசித்தபடி ,தம்பதிகள் தங்களுக்கே தங்களுக்கான தருணங்களை

அளவளாவிக் கொண்டாடும் அருமையான அடுத்த அரை மணி நேரம்,

தம்பதிகள்  இருவருக்கும் மிகவும் பிடித்தமான நேரமாகும்.


   அன்றும் எப்போதும் போல எல்லா கலகலப்புகளையும் உள்வாங்கி படுக்க

செல்லும்போது மணி எப்போதும்போல பத்தரை ஆகிவிட்டது.சரி,விஜயனின்

வாட்டும் முகத்தை முதலில் நேராக்க தனது சந்தோஷ செய்தியை முதலில்

பகிர்ந்துக் கொள்ளலாம் என மீனா முடிவெடுத்தாள்." ஜெய்!உங்களுக்கு ஒரு

சந்தோஷமான விஷயம்".என்றபடி விஜயனின் கைகளை ஆசையுடன்

அள்ளித் தன் கைகளுக்குள் சிறைப் படுத்தினாள்.விஜயன் ஆவலுடன் அவள்

முகம் பார்த்தான்.


   " எனக்கு பதவி உயர்வுக் கிடைச்சிருக்கு".சொல்லும்போதே மீனாவின்

முகமெல்லாம் சந்தோஷத்தில் பூரித்திருந்தது.அதில் திளைத்தபடி," ஜெய்!

பதவி உயர்வினால் நமது பணியின் மதிப்பும்,நம் நிதி நிலைமையும் உயரும்

என்பதை விட,நமது பணியில், நமது செயல்பாட்டுக்கள், ஒரு சரியான

கோணத்தில்,ஒரு  சரியான அங்கீகாரம்  பெற்று, நமது உயர்வுக்கு வழி

வகுத்திருக்கின்றன என்பதை நினைக்கும் போதுதான்,நமது சந்தோஷம் ஒரு

நிறைவுள்ளதாக தோன்றுகிறது".என்று லயித்துக் கூறி  அவன்  முகம் பார்க்க,

 அந்த முகத்தின் கலக்கம் இன்னும் அதிகரிப்பதைக் கண்டு திகைத்துப்

போனாள்  மீனா.



Part 5                                                                                                     தொடரும்....

 

  

No comments:

Post a Comment