Monday, August 4, 2014

2.Thai mann

   ஒருவரின்  உடலுக்கு ஓய்வுக் கிட்டும் போதுதான் தன் மனதிற்கும் ஓய்வுத்

தேவை என்பதை அந்த  உடலே அப்பொழுதுதான் உணரவே ஆரம்பிக்கும்.இது

இயற்கை.அந்த நிலைதான் இப்பொழுது விஜயனுக்கும்.கடந்த சில

தினங்களாகவே அவனது மனம் ஒரு நிலைக் கொள்ளாமல் தத்தளித்துக்

கொண்டிருந்தது.அது தன்  பணியை பாதித்து விடுமோ, என அவன் மிகவும்

கவலையுற்றான்.


   ஆனால் அவன் பணி என்றும்  இறை பணி  என்பதை அவன் என்றும்  மனதில்

இருத்திக் கொண்டதாலோ என்னவோ,இறைவன் அருளால்அவனது

பணியிடத்தில் அவனது மனம் முழு ஈடுபாட்டுடன் ஒத்துழைத்தது.

ஆனால் பணி  முடிந்து வீடு திரும்பியதும்,அவனது மனம் எதற்கோ ஏங்கி

தவித்தது.அதன் ஏக்கம் எதை சார்ந்ததாக இருக்கும்?.விஜயனால் இனம் காண

இயலவில்லை.


    அவனது வீட்டில் அவனது அன்பு மனைவி மீனாவிற்கு தன் சிநேகிதக்

கணவனின் நிலைக் கண்டு சிறிதுக் கலக்கமானது.ஒரு வார இறுதி

நாளில் உறங்குவதற்கு முன் தன்  கணவனின் கரம் பற்றி "ஏன் ஜெய்(மீனா தன்

செல்லக் கணவனை செல்லமாக அன்புத் ததும்ப  இப்படித்தான்அழைப்பாள்)

அந்த அழைப்பில் ஒரு இயல்பான இதம் இழைந்தோடும்.அந்த இதம்

 விஜயனின் இதயத்தை நெகிழ வைக்கும்.


   அவர்களது குழந்தைகள் மூத்தவள் ஷைலஜாவும்,இளையவன் ஸ்ரீதரும்

விஜயனை  பல மகிழ்ச்சியானத் தருணங்களில் "  அம்மாவின் ஜெய் '

என்று அழைத்து சீண்டுவதுண்டு.  " ஏன்  ஜெய்!இப்போதெல்லாம

முகம் அடக்கடி வாடிப் போகிறதே! உடம்புக்கு முடியலயா?".விஜயன் தன்

அன்பு மனைவியை ஏறிட்டுப் பார்த்தான்.


   மீனாவிற்கு வயதே ஏறாது  என்றுத் தோன்றியது.இவளும் நம்மூரில் தன்

 பட்டப் படிப்பை  முடித்து விட்டு இங்கு  வந்து இந்த அந்நிய மண்ணில்

தன இயல்புக்கு ஏற்றாற்போல் ஒரு படிப்பைத் தேர்ந்தெடுத்து,  ஆர்வமுடன்

'ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் ' கோர்ஸ் முடித்து ஒரு மருத்துவ மனையில்

 பணிப் புரிகிறாள்.


   நம் பாரதத்தின் கலாச்சாரத்தை இயன்ற மட்டும் காத்துக் கடைப் பிடிப்பாள்.

நம்மூர் பண்டிகையெல்லாம் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

குழந்தைகளின் உடை விஷயங்களில்கூட அதிகமாகத் தலையிடுவதாக

குழந்தைகளின் குற்றச்சாட்டு.ஷைலஜா தன்  திருமணத்திற்கு

பிறகுதான்,தன் விருப்பப்படி நவநாகரீகமாக உடையணிந்துக்

கொள்வதாகப்  பீற்றிக் கொள்வாள்.இருநூறு மைல்களுக்கு அப்பால் அந்த

அயல் நாட்டிலேயே இருக்கிறாள்.மாப்பிள்ளை நம்மூர்தான்;நம் சனம்தான்.

நல்ல மாதிரி.பெற்றோருடன்  அந்த அயல் நாட்டிலேயேகுடியிருக்க

குடியுரிமைப் பெற்றவர்கள்.


   மாப்பிள்ளை பெண் இருவரும் மீனாவிடம் பதவிசாக நடந்துக்

கொள்கிறார்கள்.மீனாவும்,தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளத்

தெரிந்துக் கொண்டிருக்கிறாள்.அதிகமாக அவர்களது விஷயத்தில்

தலையிடுவதில்லை.விஜயனையும்தலையிட விடுவதில்லை.மகன்

ஸ்ரீதருக்கு பெண் பார்க்க வேண்டும்தான்.மூத்தவள் குடும்பம் போலவே

இங்கேயே ஒரு நல்லக் குடும்பமஇறைவனருளால் ஸ்ரீதருக்கு அமைந்து

விட்டால் நல்லதுதான்.மீனாஅடிக்கடி இப்படி  எண்ணிக் கொள்வாள்.


    இப்படி இருக்கும்போது எப்போதும் கலகலவென இருக்கும் விஜயன் கடந்த

சில நாட்களாக அமைதி இழந்துக் காணப்படுவது மீனாவிற்கு சிறிது திகிலாக

இருந்தது.



                                                                                                       தொடரும்......


Part 3               

No comments:

Post a Comment